தென்மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சேவையில் திடீர் மாற்றம்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு ரயில் பாதைகளில் இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடைபெற உள்ளது. அதனால் ரயில் பாதையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த மாற்றங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இதில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ரயில்வே வாரியம் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.
ரூ.218,200/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
அதன்படி தற்போது முன்பதிவில்லா சேவையை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து திருநெல்வேலி-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடைபெற உள்ளது. அதனால் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதே போல் நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.