பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகிய சௌந்தர்யா – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதியும் கண்ணம்மாவும் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என குடும்பத்தினர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரூபா ஸ்ரீ விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதி எப்போது தான் DNA டெஸ்ட் எடுப்பார், ஹேமா மற்றும் லட்சுமி இருவருமே தன்னுடைய குழந்தைகள் தான் என்பதை பாரதி எப்போது அறிந்துகொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்துகொண்ட போது பாரதியின் அம்மாவான சௌந்திரயாவுக்கு கண்ணம்மாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை.
Exams Daily Mobile App Download
பின்பு, கண்ணம்மாவின் நல்ல குணத்தை புரிந்துகொண்டு மருமகளாக ஏற்றுக்கொள்கிறார். சௌந்தர்யா மருமகளாக ஏற்றுக்கொள்ளும் சமயத்தில் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் வருகிறது. வருணின் குழந்தையை தான் கண்ணம்மா சுமந்து கொண்டிருக்கிறார். இவர் தமக்கு துரோகம் இளைத்துவிட்டார் என கண்ணம்மாவை விட்டு விலகுகிறார். கண்ணம்மாவை விட்டு விலகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் பாரதிக்கு துளியும் குறையவே இல்லை.
வெண்பாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அடுத்த திருப்பம்!
பாரதி கண்ணம்மாவை விட்டு விலகிய போதும் கூட சௌந்தர்யா தான் தொடர்ந்து கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார். தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரூபா ஸ்ரீ சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சௌந்தர்யா பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.