Aadhar- EB இணைப்பு: இனி ஆதார் நகல் Upload செய்ய தேவையில்லை – OTP எண் மூலமாக இணைக்க ஏற்பாடு!!
தமிழகத்தில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்வதற்கு ஆதாரின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் நுகர்வோர் சிரமப்படுவதால் இதற்கு பதிலாக எளிமையான முறையை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
OTP முறை:
தமிழகத்தில் மின் இணைப்பு பெற்றவர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இதனை பொதுமக்கள் விரைவில் செய்வதற்கு வசதியாக கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பல்வேறு இடங்களில் அரசு சார்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி தற்போது, மின் நுகர்வோர் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் OTP பெறப்பட்டு ஆதார் இணைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆதார் அட்டை எண், பெயர் ஆகிய விவரங்களை உள்ளிட்ட பிறகு ஆதார் அட்டை நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போது சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் அந்தந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளரால் சரிபார்க்கப்பட்டு அதன்பின்பு உறுதி செய்யப்படும்.
உஷார் மக்களே.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!
Exams Daily Mobile App Download
இதில் நுகர்வோர்கள் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்வதில் சிக்கல்கள் உள்ளதாகவும் அத்துடன் இதில் தங்களின் புகைப்படம் இருப்பதால் பாதுகாப்பாக இருக்காது என புகார் தெரிவிக்கின்றனர். அதனால் இதற்கு பதிலாக OTP முறை அல்லது கைரேகை முறை பயன்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, ஆதார் நகல் இல்லாமல் OTP முறையில் Aadhar- EB எண் இணைக்கும் வசதி தற்போது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.