தமிழக அரசு விரைவு பேருந்துகளில் விரைவில் கூரியர் சேவை – ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தொடக்கம்!

0
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் விரைவில் கூரியர் சேவை - ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தொடக்கம்!
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் விரைவில் கூரியர் சேவை - ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தொடக்கம்!
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் விரைவில் கூரியர் சேவை – ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தொடக்கம்!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு விரைவு பேருந்துகளில் வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பார்சல் சர்வீஸ் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திட்டமானது போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

பார்சல் சர்வீஸ்:

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தின் கீழ் 1100 விரைவு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதற்கு முன்னதாக ஆம்னி பஸ்களில் இந்த சேவை ஏற்கனவே கிடைக்கிறது. அதன் படி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளிலும் பார்சல் சேவை தொடங்கப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அரசு விரைவு பஸ்களில் குறைவான வாடகையில் 150 கிலோ வரை கொண்டு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளையக்கூடிய விவசாய பொருட்கள், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விவசாயிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல அரசின் இந்த பார்சல் சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

இந்த சேவைக்கான கட்டணம் கிலோமீட்டர் கணக்கில் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக போக்குவரத்து கழக கிளை மேலாளர்களிடம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் பார்சல் சேவைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த சேவையானது அனைத்து பேருந்துகளிலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் லாரி பஸ்களை விட அரசு பார்சல் சேவை குறைவான கட்டணத்தில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் லாரிக்களில் பொருள்களை அனுப்பினால் 2 நாட்கள் ஆகும். ஆனால் அரசு பார்சல் சேவை மூலமாக ஒரே நாளில் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முதலில் சென்னை, மதுரை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் கூரியர் சேவை அளிக்கப்படும் எனவும் அடுத்து மற்ற மாவட்டங்களில் பின்னர் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வரும் வரவேற்பை பொறுத்து சுவிக்கி, சுமோட்டா மூலம் வீடுகளுக்கே கடிதங்கள், கவர்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!