ஜனவரி முதல் பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியிட்ட மாநிலங்கள் பட்டியல்!!

0
ஜனவரி முதல் பள்ளிகள் திறப்பு - அறிவிப்பு வெளியிட்ட மாநிலங்கள் பட்டியல்!!
ஜனவரி முதல் பள்ளிகள் திறப்பு - அறிவிப்பு வெளியிட்ட மாநிலங்கள் பட்டியல்!!
ஜனவரி முதல் பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு வெளியிட்ட மாநிலங்கள் பட்டியல்!!

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகளை மத்திய அரசு மாநில அரசின் பொறுப்பில் விட்டுவிட்டது. சில மாநிலங்கள் கொரோனா பரவலிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சில மாநிலங்கள் பள்ளிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளன. அது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு அறிவிக்கப்பட்ட மாநிலங்கள்:

இந்தியாவில் தினமும் 30000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் அதைவிட குணமானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசம், சிக்கிம், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் நடைபெறுகிறது. அடுத்து சில மாநிலங்கள் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் வருகிற ஜனவரி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா தாக்கம் அதிகமான காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பீகார்:

பீகார் மாநிலத்தில் அனைத்து மேல்நிலை வகுப்புகளும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் போன்றவை திறக்கப்படவுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவு பொருள்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

கர்நாடகா:

கர்நாடகாவில் ஜனவரி 1 முதல் 10 மற்றும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பியூசி வகுப்புகள் திறக்கப்படும். இது குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடிதம் எழுதி வாங்கி வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

புனே:

புனேவில் வருகிற ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து பின் சூழ்நிலைகளை கணக்கிட்டு மற்ற வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

அசாம்:

மற்ற மாநிலங்களை போல் அசாம் அரசும் ஜனவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேல்நிலை வகுப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு:

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகாரபூர்வ முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை இருந்த போதிலும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!