அதிர்ச்சி தகவல்.. ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை!
சுனாமி:
இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சாலமன் தீவுகளில் தென்மேற்கில் உள்ள மலாங்கோவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 20 நொடிகள் தொடர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் இந்த நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். இந்த நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – 6 மணி நேரத்தில் வலுவிழக்கும்… வானிலை மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
அதன்படி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் (185 மைல்) தொலைவில் இருக்கும் சாலமன்ஸ் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.