90 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் – வெற்றிகரமாக ஆய்வு மையம் அமைத்த சீனா!

0
90 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் - வெற்றிகரமாக ஆய்வு மையம் அமைத்த சீனா!
90 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் - வெற்றிகரமாக ஆய்வு மையம் அமைத்த சீனா!
90 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் – வெற்றிகரமாக ஆய்வு மையம் அமைத்த சீனா!

விண்வெளி தங்களுக்கென ஒரு ஆய்வு மையத்தை சீனா அமைத்துள்ள நிலையில் அப்பணியில் ஈடுபட்டிருந்த 3 வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

ஆய்வு மையம்:

விண்வெளியில் உலகின் பல நாடுகளும் இணைந்து முன்னதாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. பூமியில் உள்ள ஆராய்ச்சி மையத்தை போல், விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்தில் பூமியில் இருந்து செல்லும் வீரர்கள் தங்கி தங்களது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சீனா தங்களுக்கு என்று தனியாக விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு ஆபத்து – அதிர்ச்சியளிக்கும் அதிகாரபூர்வ தகவல்!

2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ‘தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதியன்று சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இதற்காக முன்னதாகவே, விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

பூமியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இம்மையத்தை கடந்த 3 மாதங்களாக 3 சீன வீரர்கள் அமைத்து வந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவர்கள் ஷெங்ஜூ என்ற விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினர். இதற்காக அவர்கள் 2 முறை விண்வெளி நடைபயணத்தையும் மேற்கொண்டுள்ளனர். சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் சென்ஷு 12 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனையடுத்து, அங்கு தயார் நிலையிலிருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் விண்கலத்தைத் திறந்து விண்வெளி வீரர்கள் 3 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர். இதுவரை 13 சீனர்கள் விண்வெளிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!