புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.. தற்போது வெளியான அறிவிப்பின்படி Social Worker Member பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழக சமூக பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Social Worker Member பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 என்றும் அதிகபட்சம் 65 என்றும் இருக்க வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 10.12.2021 ம் தேதிக்கு முன் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி:- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1வது தெரு, திருகோகர்ணம் – அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம் – 622 002