தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு – அரசு ஆய்வு!

0
தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு - அரசு ஆய்வு!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு - அரசு ஆய்வு!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு – அரசு ஆய்வு!

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் கடந்த 2014ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

மக்கள் நலப்பணியாளர்

தமிழகத்தில் கடந்த 1989ம் ஆண்டு வேலையில்லா நிலை மிகவும் இருந்தது. அதனால் அரசு பொதுமக்களின் நலன் கருதி வேலையில்லா இளைஞர்கள் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது. இதையடுத்து 2-7-1990 அன்று இவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால் அடுத்தடுத்த ஆட்சி மாற்றத்தின் போது இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

ஆனால் இதனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. இதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தாவது, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் பல்வேறு பொருளாதார ரீதியிலான பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதனால் தங்களுக்கு ஏதேனும் நிதி உதவி வழங்குமாறு மக்கள் நலப்பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி 6ம் தேதி அன்று விசாரிக்கப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு சார்பில் ஒரு கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டது.

PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மீண்டும் கோவிட்-19 அட்வான்ஸ்! அரசு அனுமதி அளிக்குமா?

இதில் தங்களுக்கு மேலும் 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அரசு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. அதன்படி நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித் துறை ஆய்வு செய்ய முன்மொழி அனுப்பப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை பரிசீலனை செய்ய 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!