ஓ.டி.டி, சமூக வலைதளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் – மத்திய அரசு வெளியீடு!!
நாடு முழுவதும் உள்ள முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் மற்றும் OTT தளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் முறைகேடுகள் அதிகம் நடப்பதாக புகார்கள் வந்து கொண்டே உள்ளது. அதனை சரி செய்ய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்த போதிலும் சில முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே அதனை சரிசெய்யும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்:
- சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு விளைவிக்கும் விதத்தில் சட்ட விரோதமாகவும், தேச விரோதமாகவும் வெளியிடப்பட்ட பதிவுகளை யார் மூலமாக வெளியிடப்பட்டது என்ற வசதியை அமைக்க வேண்டும்.
- அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பை அதிகாரிகள் நீக்க சொன்னதும் 36 மணி நேரத்திற்குள் அதனை நீக்க வேண்டும்.
தமிழக மின்வாரிய கேங்மேன் பணியிட நியமனத்தில் முறைகேடு – ஒப்பந்த தொழிலாளர்கள் புகார்!!
- மேலும் சமூக வலைத்தளம் குறித்த புகார்களை விசாரிக்க இந்தியாவில் வசிக்கும் ஒரு தலைமை அதிகாரி உட்பட 3 அதிகாரிகளை நியமிக்கப்பட வேண்டும்.
- இந்த சமூக வலைத்தளங்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வாகம் செய்யும் இதனால் அவைகளில் ஏற்பட்ட புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையை மாதம் தோறும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து வழக்கு – பதில்மனு தாக்கல்!!
ஓ.டி.டி. தளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்:
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற ஓ.டி.டி. தளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
- ஓ.டி.டி. தளங்கள், மின்னணு ஊடகங்கள் போன்றவற்றில் செய்தி வெளியிடுபவர்கள் அவர்களின் தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை யார் யார் பார்க்கலாம் என வயது அடிப்படையில் 5 வகையாக பிரிக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் – பிப்ரவரி 27 கடைசி நாள்!!
- 5 பிரிவுகளாக யு பிரிவு (அனைவரும் பார்க்கலாம்), யு/ஏ 7+ (பெற்றோர் வழிகாட்டுதலுடன் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்), யு/ஏ 13+, யு/ஏ 16+, ஏ (வயது வந்தோர் மட்டும்) என பிரிக்க வேண்டும்.
- மேலும் யு/ஏ 13+ பிரிவுக்கு மேல் உள்ள பிரிவுகளில் பெற்றோர்கள் முடக்கி வைக்கும் வசதியை வழங்க வேண்டும்.
- மேலும் ஒவ்வொரு நிகழ்ச்சி தொடக்கத்திலும் இந்த நிகழ்ச்சியை யார் பார்க்கலாம் என குறிப்பிட வேண்டும்.
தமிழக மின்வாரியத்தில் 2900 காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் மாதம் உடற்தகுதித் தேர்வு!!
- இந்த வசதிகள் மூலமாக பொதுமக்கள் பார்க்கலாமா வேண்டாமா என முடிவு செய்து கொள்வார்கள்.
- மேலும் இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகையாளர்களுக்கான விதிமுறைகளை மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் அவர்கள் கேபிள் டி.வி.நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தையும் பின்பற்ற வேண்டும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்