அக்னிபாத் திட்டத்தின் கீழ் இதுவரை 57,000 விண்ணப்பங்கள் வரவேற்பு – இந்திய விமானப்படை தகவல்!
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் நாடு முழுவதும் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 57,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
அக்னிபாத் திட்டம்
இந்திய ஆயுதப் படைகளில் இளைஞர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 14 அன்று அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் அக்னிவீரர்கள் 4 ஆண்டுகள் வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து அதற்கு பிறகு ஓய்வு பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதாக கருதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஆயுதப் படைகளுக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
Exams Daily Mobile App Download
இப்போது அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்ட ஜூன் 14ம் தேதி முதற்கொண்டு இதுவரை 56,960 விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை (IAF) தெரிவித்துள்ளது. இது குறித்த ட்விட்டர் பதிவில், ‘அக்னிபாத் ஆட்சேர்ப்பு விண்ணப்ப செயல்முறைக்கு பதிலளிக்கும் விதமாக எதிர்கால அக்னி வீரர்களிடம் இருந்து இன்று வரை பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 56,960 ஆகும்’ என்று தெரிவித்துள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான செயல்முறை ஜூலை 5ம் தேதியுடன் முடிவடைய இருப்பதாகவும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் வரை ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிவார்கள். அதன் பிறகு அந்த வீரர்களில் 75 சதவீதம் பேர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். மற்றவர்கள் உடற்தகுதி, கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ராணுவ பணியில் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விருப்ப ஓய்வு பெறும் வீரர்களுக்கு ஓய்வூதிய சலுகைகளை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.