இந்தியாவிலேயே முதன்முறையாக ‘ஸ்மார்ட் விஷன்’ கண் கண்ணாடி- மதுரை அரவிந்த் மருத்துவமனையில் அறிமுகம்!
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் ‘ஸ்மார்ட் விஷன்’ கண் கண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘ஸ்மார்ட் விஷன்’ கண் கண்ணாடி:
பார்வை குறைபாடு உடையவர்களுக்கு எப்போதுமே ஒருவரின் துணை அவசியம் தேவை. ஆனால் மற்றவரின் உதவி நமக்கு எல்லா சந்தர்பங்களிலும் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இதனால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த இன்னல்களை தீர்க்கும்வகையில் பார்வை மாற்று திறனாளிகள் தங்கள் முன் உள்ள நபர்களையும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவும், எளிதாக படிக்கும் வகையிலும் பிரத்யேகமாக ஸ்மார்ட் விஷன் கண் கண்ணாடி இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிமுகமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து கவலை – 21 நாடுகள் இணைந்து கூட்டறிக்கை!
இது தொடர்பாக, குறைந்த பார்வை சேவை பிரிவு தலைமை மருத்துவர் விஜயலெட்சுமி அவர்கள் பேட்டியளித்துள்ளார். அப்போது, சர்வதேச அளவில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துகளை படிக்க பல்வேறு நவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் உள்ளது. முற்றிலுமாக பார்வையற்றவர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் முன் உள்ள நபர்களை அறிந்து கொள்ளவும் அரவிந்த் கண் மருத்துவமனையும், பெங்களூரு எஸ்எச்ஜி டெக்னாலஜியும் இணைந்து ஸ்மார்ட் விஷன் கண்ணாடியை தயாரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கண்ணாடியை அன்றாட வாழ்க்கையில் சாதாரண கண் கண்ணாடி போல் பார்வையற்றவர்கள் முகத்தில் பொருத்திக் கொள்ளலாம், ப்ளாஷ் ஒளி இருப்பதால் இரவில் கூட இந்த சாதனத்தை பயன்படுத்தி பகலை போல் படிக்கலாம் என்றும், இந்த கருவியைக் கொண்டு 73 மொழிகளை படிக்க முடியும் எனவும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.