தமிழக மின் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம்!
தமிழக மின்சாரத்துறையில் 144 கோடி ரூபாய் செலவில் .ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது. மின்சார துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல் மென்பொருள் மூலமாக கணக்கெடுப்பு நடத்தலாம்.
மின் கணக்கெடுப்பு:
தமிழகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையிலும் பல மாற்றங்களை அரசு நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மின் பயனர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 சலுகைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (மார்ச் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மின் பயனர்களின் சுமையை குறைக்க மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என்று முதல்வர் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழக மின் வாரியம் முற்றிலும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. மின் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் உங்களின் மின் கட்டண தொகையை அறியலாம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது மின்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தாமல் மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பு நடத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மென்பொருள் கணக்கெடுப்பு மூலம் மின் கட்டணம் செலுத்தும் தேதி வரும்போது மின் பயனர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்படும். இந்த திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.