மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சிறிய பேருந்துகள் இயக்கம் – வருவாய் அதிகரிக்க தமிழக அரசின் புதிய திட்டம்!
தமிழகத்தின் மெட்ரோ சிட்டியான சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு புதிய சிறிய பேருந்துகளை இயக்கும் வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய திட்டம்:
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் தாக்கல் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரசின் தனித்தனி துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. விவாதத்தில் அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் அமல்படுத்த இருக்கும் புதியதிட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசின் புதிய திட்டங்கள் பற்றி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,587 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
அதன்படி, செப்டம்பர் 8ம் தேதியான இன்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை சார்பில் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. போக்குவரத்து துறையின் கொள்கையில், மெட்ரோ நகரமான சென்னையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய திட்டத்தின் படி, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள 144 சிறிய பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சிறிய பேருந்துகள் மூலம் மெட்ரோ பயணிகளைக் கவர இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.