தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி? முதல்வருக்கு கோரிக்கை!
தமிழகத்தில் சிறு, குறு தொழில்களை 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்க கோரி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறு, குறு தொழில் கூட்டமைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது தடுப்பூசி பயன்பாட்டாலும், தொடர் ஊரடங்காலும் கொரோனா குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மினி பேருந்துகளிலும் இலவச பயணம்? அரசுக்கு கோரிக்கை!
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு தொழில் நிறுவனங்கள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. வேலை செய்தாலும், செய்யா விட்டாலும் வாடகை, வட்டி, மின் கட்டணம், கடன் தவணைகள் அனைத்தையும் செலுத்தியாக வேண்டிய நிலையில் உரிமையாளர்கள் உள்ளனர். மேலும் பணிபுரியும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி மிகவும் சிரமத்தில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் ஊரடங்கு காலத்திலும் சிறு, குறு நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் சிறு, குறு தொழில்கள் மட்டும் முடக்கப்படுவது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இதனால் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கும் நிலை உருவாகும் எனவும், ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2 மாதங்களுக்கு மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், மேலும் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் 50 சதவீதம் பணியாளர்களுடன் உடனடியாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.