தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் இனி ‘நேரலையில்’ – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார்.
முதல்வர் பதில்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில், முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண்மைத் துறைக்கென முதன்முதலில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு தடை!
இன்றைய அவையின் தொடக்கத்தில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழர்களின் நாகரீகத்தை உலகறியச் செய்ய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக ஆட்சி அமைத்த பின்பு தேர்தல் அறிக்கையாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பப்படும் என தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ICC Men’s T20 World Cup 2021 – 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!
சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்னர், நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது பற்றி கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் கூறியதாவது, கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சில காரணங்களால் நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடக்கும் போது நேரலை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.