நாடு முழுவதும் இடைநின்றவர்களுக்கான திறன் பயிற்சிகள் – டிச.15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
நாடு முழுவதும் இடைநின்றவர்களுக்கான திறன் பயிற்சிகள் - டிச.15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் இடைநின்றவர்களுக்கான திறன் பயிற்சிகள் - டிச.15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் இடைநின்றவர்களுக்கான திறன் பயிற்சிகள் – டிச.15 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை தொடராமல் இடைநின்றவர்களாக இருக்கின்றனர். இதனால் இவர்களுக்கு என்று திறன் பயிற்சிகளை வழங்க ஏஐசிடிஇ திட்டமிட்டுள்ளது.

ஏஐசிடிஇ-ன் திறன் பயிற்சிகள்:

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு உதவி பெறும் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற அனைத்து விதமான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் அல்லது கணினி மூலமாக கல்வி கற்று வந்தன. ஆனால் சாதாரண மக்களிடம் மொபைல் அல்லது கணினி வசதிகள் இல்லாதலால் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை நிறுத்திவிட்டன. தங்கள் பொருளாதார நிலையை சரி செய்வதற்கு வேலைகளுக்கு செல்ல தொடங்கின.

தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!

அதனால் மாணவர்கள் முழுவதுமாக தங்கள் படிப்பை நிறுத்திவிட்டன. இவ்வாறு 10,11 மற்றும் 12- ஆம் வகுப்புகளில் இடைநின்ற மாணவர்களுக்கு ஏஐசிடிஇ -இன் ‘கர்மா’ என்ற திட்ட வழிகாட்டுதலின் படி திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஏஐசிடிஇ கட்டுப்பாடில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் திறன் பயிற்சிகளுக்கு ஏற்றவாறு கட்டணத்தை வசூலிக்கலாம். அதே போல் திறன் பயிற்சிகளை வழங்கி வரும் கல்வி நிறுவனங்களில் பயிற்சி வழங்குவதற்கான முழுமையான கட்டமைப்புகளை பெற்றிருக்க வேண்டும்.

ரசிகரின் கேள்வியால் கடுப்பான ‘பாக்கியலட்சுமி’ இனியா நடிகை நேஹா – இதெல்லாம் முக்கியமா?

இவ்வாறு வழங்கப்படும் திறன் பயிற்சிகள் அனைத்தும் தேசிய திறன் தகுதி வழிகாட்டுத் திட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் இது பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற ஏஐசிடிஇ இணையதளத்தில் வெளிட்டுள்ளது. இதையடுத்து இடைநின்ற மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்க விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வருகிற டிச.15-ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!