தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சோதனை தேர்வு – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மற்றும் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு சோதனை தேர்வு நடத்தவுள்ளதாக பள்ளி கல்வி இயக்கம் அறிவித்தது. தற்போது இத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படவுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் 1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் சம்பளத்துடன் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வாரத்தில் 3 நாட்கள் என்ற கணக்கில் நேரடியாக ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை சோதிக்கும் வகையில் அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு தேர்வு நடத்தவுள்ளதாக பள்ளி கல்வி இயக்கம் அறிவித்தது. தற்போது இத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படவுள்ளது.
வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு – அதிக சம்பளம் ஈட்டும் வழிமுறைகள்!
மேலும் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் படித்து எழுதினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் இத்தேர்வுக்கான பயிற்சிகள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீண்டும் ஆன்லைன் மூலம் அதே பயிற்சியை ஆசிரியர் பெறுதல் வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
அதில் தமிழ்நாட்டில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டகங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது. இதில் காணொளிகள், செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியிலும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர். அதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெற்ற பின்பு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.