தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரக திறனாய்வுத் தேர்வு!
தமிழகத்தில் ஊரக தேசிய திறனாய்வுத் தேர்வை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இத்தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வு குறித்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திறனாய்வுத் தேர்வு:
இந்தியாவில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயன் பெறுகின்றனர். வறுமையின் காரணமாக கல்வி இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பயில கூடிய மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பாண்டு பிப்ரவரி 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்ச்சி அடிப்படையில் 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பூசாரி நலவாரிய நலதிட்ட உதவிகள்!
தற்போது தேர்வு நெருங்கி வரும் நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலையில் எஸ்.கே.பி., மற்றும் மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., பள்ளிகளில், இத்தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.