தமிழகத்தில் 53 பேருக்கு கொரோனா சிகிச்சை – இன்று புதிதாக 6 பேர் பாதிப்பு!!
தமிழகத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அறிக்கை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் காரணமாக தினசரி 8 முதல் 10 பேர் வரை நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாதபடிக்கு, முறையான நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – 11,000 பேர் பணிநீக்கம்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். அதே போல, கென்யாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இன்று ஒரே நாளில் சுமார் 8 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது.