‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இன்று – குவியும் வாழ்த்துக்கள்! கடந்து வந்த பாதை!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் ஒரு சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கடந்த 2007ம் ஆண்டு ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜேவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து அது இது எது, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் தனக்குரிய பாணியில் மக்களை மகிழ்வித்து வந்த சிவகார்த்திகேயன் தனக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தார்.
திறக்கப்பட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற இவரது ஆசை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது. இத்திரைப்படத்தில் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். இந்த திரைப்படங்கள் அவரது மார்க்கெட்டை உயர்த்த ரெமோ, வேலைக்காரன், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா யார் தெரியுமா? யாரும் அறியாத ஸ்வாரசியமான தகவல்கள் இதோ!
இவரது இந்த வளர்ச்சி பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறது. இப்போது கூட டான் மற்றும் அயலான் உள்ளிட்ட 2 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன். திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட துறைகளிலும் முத்திரை பதித்திருக்கிறார். இப்படி, தமிழ் ரசிகர்களால் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (பிப்.17) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.