தமிழ்நாடு குழந்தைகள் நல அலுவலகத்தில் ரூ.21,000/- ஊதியத்தில் வேலை !
பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 26.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக்குழு |
பணியின் பெயர் | பாதுகாப்பு அலுவலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
- பாதுகாப்பு அலுவலர் – 01
- ஆற்றுப்படுத்துநர் – 01
பாதுகாப்பு அலுவலர் கல்வி தகுதி:
- இளங்கலை 4 முதுகலை பட்டதாரி (10, +2, +3 மாதிரி) உளவியல் சமூகப்பணி ,/ சமூகவியல்களின் வழிகாட்டுதல் மற்றும் குழந்தைகள் நல குற்றவியல் கல்வி ஆகிய கல்வியில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- குழந்தை சார்ந்த பணியில் 3 வருடங்கள் முள்அனுபவம் பெற்றவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- குருப்-B அல்லது அதற்குமேல் பணி செய்திருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர் கல்வி தகுதி:
- இளங்கலை 7 முதுகலை பட்டதாரி (10, +2, +3 மாதிரி) உளவியல் ,/ சமூகப்பணி ,/ சமூகவியல்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- குழந்தை சார்ந்த பணியில் 2 வருடங்கள் முன்அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
- பாதுகாப்பு அலுவலர் – ரூ.21,000/-
- ஆற்றுப்படுத்துநர் – ரூ.14,000/-
வயது வரம்பு:
- பாதுகாப்பு அலுவலர் – 62 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆற்றுப்படுத்துநர் – 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்களது சுய விபரகுறிப்புடன், சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 26.07.2021 அன்று மாலை 05:00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்படவேண்டும். ஓன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
முகவரி :
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
9771-1 பெரியார் நகர், முதல் தெரு,
அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில்,
திருப்பத்தூர் சாலை,
சிவகங்கை – 630561.