சிவகங்கை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 18 நடைபெறுகிறது!!
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்ரவரி 18) நடைபெறுகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதன்படி சிவகங்கை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் தனியார் துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
பிறகு மாதத்தில் ஒரு நாள் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை காலை 10.30 மணி அளவில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல முன்னனி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தார்கள் முதல் கலந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
விருப்பமுள்ளவர்கள் கல்விச் சான்றிதழ், ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு தொழில்நெறி மையத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக புதுப்பித்து வேலையில்லாமல் காத்திருப்போருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்