தமிழக அரசில் ரூ.12000/- சம்பளத்தில் வேலை – M.S. Office தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப சிவகங்கை மாவட்டம் சத்துணவு திட்ட பிரிவில், திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு சத்துணவு திட்ட பிரிவு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சிவகங்கை மாவட்டம் சத்துணவு திட்ட பிரிவில் கணினி இயக்குபவர் பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- 01.10.2022 அன்று சூறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர வகுப்பை சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கணினி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- மேற்கண்ட தகுதி முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.12,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 15.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.