சந்தியாவிற்கு பாராட்டு விழா வேண்டாம் என கூறும் சிவகாமி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் முன்னிலை சீரியலாக வளர்ந்து வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு பார்வதியை காப்பாற்றும், நோக்கில் கதை நகர்ந்து வந்தது. இந்நிலையில் விறுவிறுப்பான ப்ரோமோ ஓன்று வெளியாகி இருக்கிறது.
ப்ரோமோ ரிலீஸ்:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் சில வாரங்களாக மிகுந்த பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, சரவணன் கடையில் வேலை பார்த்து வந்த செல்வம் ஒரு தீவிரவாதி. ஒரு கட்டத்தில் செல்வம் ஒரு தீவிரவாதி என்பதை அறிந்த பார்வதி, செல்வதால் கடத்தப்பட்டார். மேலும் பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்றி கோவிலில் குண்டு வைப்பதுதான் செல்வத்தின் திட்டம். இதை அறிந்த சந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு பார்வதியை காப்பாற்றினார். மேலும் சின்ன பையன் சர்க்கரை உடம்பிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய செய்தி!
அதையும் அறிந்த சந்தியா, சரவணன் சர்க்கரை உடம்பில் இருந்து வெடிகுண்டை டிஸ்போஸ் பண்ண முயன்றனர். ஆனால் அது முடியவில்லை, இதனால் சரவணன் வெடிகுண்டை எடுத்து கொண்டு, ஒரு பள்ளத்தில் போட்டுவிட்டார். இதனால் ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டனர். இதைஎடுத்து ஊர் மக்கள் அனைவரையும் சந்தியா சிறப்பாக செயல்பட்டு காப்பாற்றி என போலீசார் சந்தியாவை பாராட்டினார். சந்தியா போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டியவர் என்றும் பாராட்டினார். மேலும் செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சந்தியா சிறப்பாக செயல்பட்டு வெடிகுண்டை கண்டறிந்து மக்களை காப்பாற்றியதால், சந்தியாவிற்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில் சரவணன் அம்மா, எதுக்கு இந்த பாராட்டு விழா, இந்த பாராட்டு விழா நடத்தால் செல்வத்திற்கு மேலும் அதிகமான கோவம் வரும், நம்ம குடும்பத்தையும் பழி வாங்க துணிவான் என்று கூறினார். இதனால் சந்தியா, போலீசாரிடம் இந்த பாராட்டு விழா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை சந்தியா வீட்டில் வந்து சொல்லுவார். இதை கேட்டு அர்ச்சனா சாந்தியவை கிண்டல் செய்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.