அம்மாவின் பாசத்திற்காக ஏங்கும் வாணி – கொடுமை செய்யும் சித்தி! விஜய் டிவியில் புதிய நெடுந்தொடர்!
சிறு வயதிலேயே அம்மாவை இழந்து பாசத்திற்காக ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் வாணியை அவரது சித்தி கொடுமை படுத்துவது போல சிப்பிக்குள் முத்து என்கிற புதிய தொடர் விஜய் தொலைக்காட்சியில் நேற்றில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
சிப்பிக்குள் முத்து:
விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தையும் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும், சிறு குழந்தைகளில் இருந்து குடும்பத் தலைவிகள் வரை பலரும் தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். பலரும் சீரியல் பார்ப்பதை அறிந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமையில் கூட சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். மேலும், அடுத்தடுத்து பல சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்தியும் வருகின்றனர்.
கோபியை திட்டி தீர்த்த செழியன் – சமாளிக்க முடியாமல் கதிகலங்கிய கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக சிப்பிக்குள் முத்து என்கிற புதிய தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதாவது வாணி என்கிற சிறிய குழந்தை சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிடுகிறார். பின்பு, குடும்பத்தினர்கள் மற்றும் வீட்டு அக்கம்பக்கத்தினர் பலரும் இந்த குழந்தைக்காகவாது வேறொரு திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார்கள். அதே போல வாணியின் அப்பாவும் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார். வாணி தனக்கு இன்னொரு அம்மா வந்துவிட்டார் என சந்தோசப்பட்டு கொண்டிருக்கிறார். ஆனால், வாணியிடம் அவர் நான் உனக்கு அம்மா இல்லை, நான் உனக்கு சித்தி என கூறுகிறார்.
இந்த சீரியல் அப்படியே பாரதி கண்ணம்மா சீரியல் கதைக்களம் போல தான் வருகிறது. பின்பு, வாணியின் சித்தி கருவுருகிறார். வாணிக்கு சிறு வயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. வாணியின் சித்தி வாணியிடம் உனக்கு தங்கச்சி முக்கியமா அல்லது நீ கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் முக்கியமா என கேட்கிறார். எனக்கு தங்கச்சியை விட வேறு எதுவுமே முக்கியமில்லை என கூறுகிறார். வாணியை அவரது சித்து என்னவெல்லாம் கொடுமை செய்ய காத்திருக்கிறாரோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.