ரூ.1,42,400 ஊதியத்தில் SIPCOT வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
SIPCOT ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Assistant Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.05.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SIPCOT வேலைவாய்ப்பு விவரங்கள்:
- SIPCOT வெளியிட்ட அறிவிப்பில் Assistant Manager பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் B.E (CS) / B.Tech (IT) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIPCOT விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்த படிவங்களை (நாளை) 25.05.2022 ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்காக இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள், உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.