உச்ச நீதிமன்றத்தின் 9 புதிய நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்பு – வரலாற்று நிகழ்வு!
உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களில் 9 புதிய நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்க்கும் வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது.
புதிய நீதிபதிகள்:
இந்தியாவில் உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். எனவே உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க கடந்த 17ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவி உயர்வு கொடுக்க தேர்வு செய்யப்பட்டனர்.
அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை தொடக்கம் – ஒரு கிராம் விலை 4,732 ரூபாய்!
இதில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்தனா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது. மேலும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயரும் இடம் பெற்றது.
TN Job “FB Group” Join Now
ஆகஸ்ட் 26ம் தேதி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஒன்பது நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள புதிய இணைப்பு கட்டிடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விழா நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள் பதவியேற்று இருப்பது, இதுவே முதல்முறை. இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.