ஒரே நேரத்தில் நடந்த அப்பா மகன் திருமணம் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது மகா சங்கமம் சென்று கொண்டிருக்கிறது. அது முடிந்த பின் வழக்கம் போல கோபி மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க போகிறார். மேலும் எழில் காதலுக்கு பாக்கியா சம்மதம் சொன்ன நிலையில் எழில் அமிர்தா திருமண பேச்சுவார்த்தைகள் நடக்க இருக்கிறது. ஒரே நாளில் எழிலிற்கும் கோபிக்கும் திருமணம் நடைபெற பெரிய திருப்பங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு திருமணங்கள்:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியா கோபி மீது அவ்வளவு நம்பிக்கை வைக்க ஆனால் கோபி அதை விட்டு ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என ஒரே குறிக்கோளுடன் இருந்து வருகிறார். இந்த சீரியலில் வெறும் குடும்பக் கதையை மட்டும் காட்டாமல் அவ்வப்போது சமூக கருத்துக்களையும் காட்டி வருகின்றனர். அதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியல் பார்க்க இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த சீரியலில் பாக்கியாவின் மகன் எழில் கணவரை இழந்த பெண் அமிர்தாவை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அது வீட்டில் பாக்கியாவை தவிர யாருக்கும் தெரியாது. மேலும் கோபி ராதிகாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதனால் யாருடைய திருமணம் முதலில் நடக்கும் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல எழில் திருமணம் ஏற்பாடுகள் நடக்க ஈஸ்வரி சம்மதிப்பாரா என்ற பெரிய ட்விஸ்ட் இருக்கிறது.
சக்திக்கு ஆப்ரேசன் செய்ய போகும் வெண்பா, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் திடீர் திருப்பம்!
இப்படி மகன் திருமண ஏற்பாடுகள் சென்று கொண்டிருக்க மறுபக்கம் ராதிகா கோபி திருமண ஏற்பாடுகள் சென்று கொண்டிருக்கிறது. எழில் அமிர்தா, கோபி ராதிகாவுக்கு ஒரே நாளில் திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் குடும்பத்தில் யாரும் கோபியை கண்டுகொள்ளவில்லை. மேலும் கோபி திருமணத்தை பாக்கியா நிறுத்துவரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. அதனால் பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் நல்ல இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.