மத்திய அரசின் ‘ஜன்தன் வங்கிக்கணக்கு’ தொடங்கும் எளிய வழிமுறைகள்!
மத்திய அரசின் ஜன்தன் வங்கி கணக்கின் நன்மைகளும், அவை தொடங்குவதற்கான எளிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ஜன்தன் வங்கி கணக்கு:
நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் மத்திய, மாநில அரசின் நிதி உதவிகள் இந்த ஜன்தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
இத்திட்டத்தின் மூலம் 7 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்குவது இலக்காக வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
ஜன்தன் வங்கி கணக்கு தொடங்குவதற்கான வழிமுறைகள்:
- 18 வயது நிரம்பியவரும் அதற்கு கீழ் உள்ளவர்களும் ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கலாம்.
- அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளையில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
- அரசு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன் தொகையாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் வங்கிகளைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகை மாறுபடுகிறது.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உங்களது இரண்டு புகைப்படங்களை இணைக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- மேலும் அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுக்கான நகல்களையும் இணைக்க வேண்டும்.
- அதன்பின்னர் விண்ணப்ப படிவத்தில் ஏடிஎம் கார்டு, காசோலைப் புத்தகம், ஆன்லைன் பரிவர்த்தனை வசதி போன்றவற்றை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.
- அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர் உங்கள் வங்கி விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.
- ஏடிஎம் கார்டு கிடைத்தவுடன் குறைந்த பட்சம் நூறு ரூபாயாவது எடுத்து கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
- ஜன்தன் வாங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டு இருந்தால் நீங்கள் ஓவர் டிராப்ட் மூலம் பணத்தை எடுக்க முடியும்.
- வாங்கி கணக்கில் 6 மாதங்களாவது குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்திருக்க வேண்டும்.