இ-ஆதார் ஆன்லைனில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!
மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது ஆதார் கார்டு. இந்நிலையில் மக்கள் பயனடையும் வகையில் இ-ஆதார் பெறுவது எப்படி என்பதற்கான முழு வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.
இ-ஆதார்:
இன்றைய கால கட்டத்தில் நாட்டில் அரசின் முக்கிய பணிகள், வங்கி கணக்கு தொடங்குவது முதல் வருமான வரி செலுத்தும் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட இந்த சேவை தற்போது அனைத்து தரப்பு மக்களாலும் கார்டு மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இதனை எளிமையாக்கும் பொருட்டு இ-ஆதார் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இ-ஆதார் எவ்வாறு பெறுவது என்பதற்கான முழு வழிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இ-ஆதரினை XML பார்மெட்டில் பதிவிறக்கம் செய்யும் பொழுது அதில் பயனர்களின் பெயர், குறிப்பு எண், முகவரி, புகைப்பதால், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் என பல விவரங்கள் இடம் பெற்றிருக்கும். XML பார்மெட்டில் இதனை பதிவிறக்கம் செய்தால் அனைத்து துறைகளிலும் மிக எளிதாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் இதனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-ஆதார் பெறும் வழிமுறை:
- பயனர்கள் இ-ஆதார்க்கு https://resident.uidai.gov.in/offline-kyc என்ற இணையத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும்.
- இந்த தளத்தில் பயனர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஆதார் நம்பர், கேப்சா மற்றும் ஓடிபி ஆகியவற்றை பதிவு செய்து அப்டேட் செய்ய வேண்டும்.
- ஒடிபியினை பயன்படுத்தி பயனர்கள் ஜிப் முறையில் இ-ஆதாரினை பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இதனை பயனர்கள் பாஸ்வர்ட் மூலம் பாதுகாத்து கொள்ளலாம்.
- இ-ஆதார் XML பார்மெட்டில் உள்ளதால் இதனை தங்களது மொபைல் அல்லது வேற்று சாதனங்களில் சேமித்து வைத்துக்கொள்ள இயலும்.