புதிய ரேஷன் கார்டுக்கு நிமிடத்தில் விண்ணப்பிக்கும் முறை – எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
ரேஷன் கார்டு மூலம் அரசின் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் பொருட்களை பெறலாம். கடந்த தமிழகத்தில் மே மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கில் போது ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் மற்றும் நிவாரண தொகைகள் வழங்கப்பட்டது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரேஷன் கடை மூலம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கார்டுகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அக். 1 முதல் சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை – ஜிப்மர் அறிவிப்பு!
இதற்காக மக்கள் மாவட்ட உணவு வழங்கல் துறைக்கு சென்று வருகின்றனர். ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் ரேஷன் கார்டு முக்கிய இருப்பிட சான்றாகவும் உள்ளது. சர்க்கரை ரேஷன் கார்டை, அரிசி ரேஷன் கார்டாக மாற்றுவது, குடும்ப உறுப்பினரின் பெயரை சேர்த்தல், நீக்குதல் போன்றவைகளை எளிதாக ஆன்லைன் மூலம் செய்து விடலாம். அதனை தொடர்ந்து தற்போது புதிய ரேஷன் கார்டையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:
- தமிழக அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Food Security என்ற பிரிவில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவும்.
- Food Security பிரிவில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்படும் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு SUBMIT என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு ரேஷன் கார்டு விண்ணப்ப எண் கிடைக்கும்.
- அதன்பிறகு அரசின் சிட்டிசன் கார்னர் என்ற இணைய பக்கத்தில் Track Food Security Application ஐ க்ளிக் செய்து உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.