சிம் கார்டு பயனாளர்கள் கவனத்திற்கு – COAI எச்சரிக்கை !
உங்கள் சிம் கார்டு முடங்கி விட்டதாக கூறி ஒரு கும்பல் உங்களின் தனிப்பட்ட ஆவணங்களை திருடி மோசடியில் ஈடுபடுவதாகவும், சிம் கார்டு பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு COAI தெரிவித்துள்ளது.
COAI எச்சரிக்கை :
உங்கள் சிம்கார்டில் பிரச்னை உள்ளதாக கூறி குறுஞ்செய்திகள் அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஒரு சில கும்பல்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக சமீபகாலமாக புகார்கள் எழுந்துள்ளது. நீங்கள் பயன்படுத்தும் சிம்மில் பிரச்சனை உள்ளது அதை சரி செய்யாவிட்டால் உங்கள் சிம் பிளாக் செய்யப்படும் என அச்சுறுத்துகின்றனர். இதை கேட்டதும் பயனர்கள் அதிர்ச்சி அடைந்து என்ன செய்ய வேண்டும் என்று பேச்சு கொடுக்க தொடங்குகின்றனர். இது மோசடி கும்பலுக்கு ஏதுவாக அமைகிறது.
உடனடியாக நாங்கள் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை பதிவிறக்கம் செய்ய வைத்து அதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட பணம் தொடர்பான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவிறக்கம் செய்ய வைக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் மர்ம கும்பலில் வலையில் விழுந்து தங்களாவே அவர்கள் ஆவணங்களை இழக்கின்றனர். அதன் பிறகு ஆவணங்களை வைத்து அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வங்கிகள் மூலமாகவும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
எனவே உங்களுக்கு தெரியாத நபர்கள் யாரும் கால் செய்தால் பதிலளிக்க வேண்டாம் எனவும் சிம் கார்டு குறித்து தகவல் கேட்டால் எதையும் பகிர வேண்டாம் எனவும் செல்லூலார் ஆப்ரேட்டர் அசோஷியேஷன் எச்சரித்துள்ளது. சிம் கார்டு பயனர்களுக்கு சந்தேகம் வந்தால் அருகிலுள்ள உங்களின் நெட்வொர்க் நிறுவன அலுவலகங்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் தேவையற்ற மர்ம கும்பலிடம் சிக்கி உங்களின் பணத்தை இழக்க வேண்டாம். ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனங்களும் தனித்தனியாக அதிகாரப்பூர்வ செயலிகளை வைத்துள்ளன. அதை மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவும் COAI அறிவுறுத்தியுள்ளது.