Common Wealth போட்டிகள் 2022: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

0
Common Wealth போட்டிகள் 2022: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
Common Wealth போட்டிகள் 2022: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
Common Wealth போட்டிகள் 2022: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

பதக்கம் வென்ற இந்திய வீரர்:

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கி ஆகஸ்ட் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா, போட்டியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர். மேலும் தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 164 வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு கோஸ்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு சிந்து தான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது நினைவுகூறத்தக்கது. முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

தமிழகத்தில் மாணவ – மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை எப்போது? வெளியான தகவல்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரிவில் பளுதூக்குதலும் ஒன்று. அந்த வகையில் இன்று நடந்த பளு தூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதாவது 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் 248 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 21 வயதான அவர், ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் வென்ற இந்த வெள்ளிப் பதக்கமே இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும். இதையடுத்து பல்வேறு தரப்புகளில் இருந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!