தமிழக அரசு இட ஒதுக்கீட்டில் சிலம்பம் இணைப்பு? விளையாட்டுத்துறை தகவல்!
தமிழகத்தில் 3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று வருகின்றனர். அரசு பணிகளில் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்கபடுகிறது. இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணிகளில் முதலில் 2% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
IPL போட்டிகளுக்கு இடையே 10 வினாடி விளம்பரத்திற்கு ரூ.18 லட்சம் – ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு!
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஈடுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது. சிலம்பம் சிறந்த தற்காப்பு கலையாக உள்ளது. இந்த கலையை முறையாக கற்றுக்கொள்ள 6 மாத காலம் ஆகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சிலம்பம் கற்று கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த அரிய கலையை கற்றுக் கொடுப்பதற்காக தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற பல சிலம்பாட்ட கழகங்கள் உள்ளன. சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த கலையை ஊக்குவிக்கும் விதமாகவும், சிலம்ப வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் இட ஒதுக்கீடு வகையில் சிலம்பம் சேர்க்க உரிய பணிகள் நடைபெறுகிறது. மேலும் உதகையில் மலை மேலிட பயிற்சி மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கான தொகை 50,000 ரூபாயில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.