தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கையெழுத்து பற்றிய புதிய அரசாணை!
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பெயரின் கையெழுத்துக்களை குறிப்பிடுவதற்கு புதிய வழிமுறையை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் கையெழுத்து:
தமிழ்நாடு அரசின் ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக தமிழ் மொழியே பயன்பாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று 1956 ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் முதன்மை பணியாக தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரை அனைவரும் தமிழ் மொழியில் தான் கையெழுத்திட வேண்டும். தற்போது இது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி உடையோர் பட்டியல் வெளியீடு!
இதன் இரண்டாவது படிக்கபட்ட ஆணையில் அரசுத் துறைகளில் வெளியிடப்படும் அனைத்து அறிவிப்புகள் மற்றும் அறிவிக்கைகள் ஏல, இதர விளம்பரங்கள் போன்றவை வெளியிடும் போது அதில் அலுவலர்களின் பெயர்களுக்கு முன் குறிப்பிடப்படும் முன்னெழுத்தானது ஆங்கில எழுத்து உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்து (எம்.பழனி) எழுதப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதை தற்போது தவிர்த்து முன் எழுத்தானது சரியான தமிழ்மொழியை பயன்படுத்தியே (ம.பழனி) கையொப்பமிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலையெழுத்துக்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று மூன்றாவது படிக்கபட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
அதனால் முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போது முன்னெழுத்தை தமிழ் மொழியிலேயே கட்டாயமான முறையில் எழுத வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகம் அணுகும் அரசுத் துறைக்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த இடங்களில் பொதுமக்களால் நிரப்பப்படும் கோரிக்கை விண்ணப்பங்களில் முன்னெழுத்துடன் தமிழில் கையொப்பமிட வேண்டும் என்ற அறிவிப்பும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.