புதுமண சீரியல் ஜோடி சித்து & ஷ்ரேயாவுக்கு நேர்ந்த சோகம் – வருத்தத்தில் ரசிகர்கள்!

0
புதுமண சீரியல் ஜோடி சித்து & ஷ்ரேயாவுக்கு நேர்ந்த சோகம் - வருத்தத்தில் ரசிகர்கள்!
புதுமண சீரியல் ஜோடி சித்து & ஷ்ரேயாவுக்கு நேர்ந்த சோகம் - வருத்தத்தில் ரசிகர்கள்!
புதுமண சீரியல் ஜோடி சித்து & ஷ்ரேயாவுக்கு நேர்ந்த சோகம் – வருத்தத்தில் ரசிகர்கள்!

கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் சீரியல் மூலமாக நடித்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்களுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

சித்து & ஷ்ரேயா:

டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமானவர்களின் வரிசையில், நடிப்பிற்கான அறிமுகம் கிடைத்தவர் சித்து. இவரின் டிக் டாக் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இதனால் கிடைத்த வாய்ப்பு தான் கலர்ஸ் தமிழ் சீரியல் ‘திருமணம்’. இந்த சீரியலில் இவரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்த திருமணம் தொடரில் தன்னுடன் நடித்த ஹீரோயின் ஸ்ரேயா என்னும் நடிகையை சித்து காதலிக்க தொடங்கினார். ஸ்ரேயா முன்னதாக சன் டிவியில் பிரபல நடிகர் சுந்தர் சி இயக்கி வந்த ஒரு மெகா தொடரில் நடித்துள்ளார். பல வருடங்களாக இருவரும் ஒன்றாக நடித்து வந்த நிலையில், காதலிக்க தொடங்கினார்கள்.

விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – புதிய நேரத்தில் ஒளிபரப்பு!

இவர்கள் காதலை வெளியிட்ட பிறகு சமூக வலைத்தளங்களில் இவர்களின் திருமணத்தை பற்றிய கேள்விகள் அதிகம் எழுந்தது. இவர்களின் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோவும் பெரிய அளவில் ரசிகர்களால் சிறப்பிக்கப்படும். இந்நிலையில், சமீபத்தில் நடந்த சித்து மற்றும் ஸ்ரேயா திருமணத்தை ரசிகர்கள் திருவிழாவை போல் கோலாகலமாக நடத்தி கொண்டாடினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சித்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ரஜினி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். சித்து மற்றும் ஷ்ரேயா ஜோடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். பலரும் பேன் பேஜ் நடத்தி வருகின்றனர்.

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?

இந்நிலையில், இவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்து பேன் பேஜ் நடத்தி வந்த கிட்டத்தட்ட 11,000 ரசிகர்களுக்கு மேல் பாலோவர்ஸ்களை கொண்ட ஒரு ரசிகர் திடீரென்று இறந்து விட்டார். இந்த செய்தியை அறிந்த ஷ்ரேயா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் எங்களோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை. தற்போது நீங்கள் ஒரு நல்ல இடத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களை அதிகம் பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை என்பதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறோம். இதனால் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை சித்து ரீட்வீட் செய்து ரெஸ்ட் இன் பீஸ் என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் சோகத்தை அறிந்த ரசிகர்கள் இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!