சிறந்த மகனுக்கான விருதை பெற்ற ‘ராஜா ராணி 2’ சீரியல் சரவணன் – வாழ்த்து தெரிவித்த மனைவி!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் விஜய் டெலிவிஷன் அவார்ட் நடைபெற்றது. அதில் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருது கிடைத்தது. இதற்காக சிந்துவின் மனைவி ஸ்ரேயா வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
சிறந்த மகனுக்கான விருது:
கலர்ஸ் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலமாக காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஜோடி சித்து மற்றும் ஷ்ரேயா. இவர்கள் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தான் பெற்றோரின் தலைமையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் சீரியலில் சித்து மற்றும் ஷ்ரேயா நடித்து கொண்டிருந்த போதே இருவரின் ஜோடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. விறுவிறுப்பாக திருமணம் சீரியல் ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.
கோபியுடன் பழகும் பெண்ணை கண்டுபிடித்த எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மீண்டும் மற்றொரு சீரியலில் இணைந்து நடிக்கும்படி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். தற்போது சித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அன்புடன் குஷி சீரியலில் நடித்து கொண்டிருந்தார். அந்த சீரியலும் நிறைவடைந்ததால் தற்போது ஜீதமிழில் ஒளிப்பரப்பாகும் ரஜினி சீரியலில் நடித்து வருகிறார். சித்து நடித்துக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியல் மக்களின் மத்தியில் அதிகமாக பிரபலமாகி வருகிறது.
அதாவது அம்மாவின் பேச்சை தட்டாத ஒரு குடும்ப பையனாக சித்துவின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் டெலிவிஷன் அவார்ட் நடைபெற்றது. சிறந்த சீரியல், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவில் சித்துவிற்கு சிறந்த மகனுக்கான விருது கிடைத்தது. சித்துவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.