தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – செப்.18 தொடக்கம்!
தமிழகத்தில் செப்டம்பர் 18ம் தேதி தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதற்காக தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கல்லூரி இறுதியாண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடைபெற்றது. கொரோனா தொற்று குறையாத இந்த நிலையில் நேரடி தேர்வுகள் நடைபெற்றால் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகும் என்பதால் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. தற்போது தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா குறைந்து வரும் நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெற தொடங்கியுள்ளது.
SBI வங்கியின் ஓய்வூதிய சேவை வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வலைதளம் புதுப்பிப்பு!
தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் இந்தாண்டு கொரோனா தாக்கம் அதிகரித்த காரணத்தால் தேர்வர்களின் நலன் கருதி தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மாதம் செப்.16 முதல் 28ம் தேதி வரை தொழில்நுட்பத் தேர்வுகள் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
தமிழகத்தில் இன்று முதல் வெளுத்து வாங்கப் போகும் கனமழை – வானிலை அறிக்கை!
அதன்படி நாளை (18.09.2020) முதல் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. தேர்வு மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தேர்வு அதிகாரிகள் அனைவரும் 3 அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தேர்வர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்படும் என்றும் இயக்குனர் தெரிவித்தார்.