தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு – இனி 3 கிலோ கோதுமை தான் கிடைக்கும்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கோதுமையின் அளவை மத்திய அரசு குறைந்துள்ளது. அதனால் அடுத்த மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கோதுமை:
இந்தியாவில் கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் தங்களின் வேலைகளை இழந்து சிரமப்பட்டனர். இந்த சூழலில் மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச தானியங்களை வழங்கியது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டம் மூலம் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்தது. மேலும் தமிழ்நாடு, கேரளா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. கோதுமை ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை அடுத்து கோதுமை வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க மொத்தம் 3 கோடி கிலோ கோதுமை தேவை. ஆனால் இந்த மாதம் 85 லட்சம் கிலோ மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயல் – தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை! மக்களுக்கு எச்சரிக்கை!
அதனால் வரும் நவம்பர் மாதம் அதிகபட்சமாக ஒரு ரேஷன் கார்டுக்கு 3 கிலோ கோதுமை மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால் தமிழகத்திற்கு கூடுதலாக கோதுமை ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.