தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் முகாம்கள் – அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர் முகாம்:
தமிழக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. மேலும் பல திட்டங்கள் செய்லபடுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. ஆலோசனைகள் முடிவடைந்த பின் மக்களுக்கு நல்ல பதில் அளிக்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசு படிப்படியாக மீட்டு வருகிறது. மாநிலத்தில் புதிய தொழில் தொடங்க தனியார் நிறுவனங்களுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்கி வேலை வாய்ப்பினை அதிகரிக்க வழி செய்துள்ளது. மேலும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் வீடு தேடி வரும் இலவச மருத்துவ சேவைகளை செய்து வருகிறது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படுத்தபடும் சேவைகள் மக்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தொடர் விடுமுறையால் அதிகரித்த ஆம்னி பேருந்து கட்டணம் – பொதுமக்கள் அதிர்ச்சி
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஆகஸ்ட் 2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் 13.8.2022 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தவிர நியாய விலை கடைகளில் நடக்கும் புகார்களையும் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என்றும், குறிப்பிடப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.