தமிழகத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – இன்று முதல் தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கானது வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகளின் ஒரு பகுதியாக அனைத்து கடைகளும் இயங்கும் நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தொற்று அதிகரித்த காரணத்தால் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்தனர். அதன் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 14 முதல் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளது. 50% வாடிக்கையாளர்களுடன் உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தளர்வுகளுடன் தற்போது உள்ள ஊரடங்கானது வரும் ஜூலை 19 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அனைத்து கடைகளும் செயல்படும் நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு எழுத்துத் தேர்வுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக் கூடிய இடங்களில் கிருமிநாசினி கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து பதிவு செய்ய வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.