தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் முழு ஊரடங்கு விதிக்காமல், கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா 3 ஆம் அலைக்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தற்போது நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடைகளின் இயக்கத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், வணிக நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ரெப்போ (REPO) வட்டி விகிதம் மாற்றம்? ஆளுநர் விளக்கம்!

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முழு ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோருடன் சென்னையை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் கடைகளை திறப்பது தொடர்பாக வணிகர்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், ‘தமிழகத்தில் கடந்த வாரத்தில் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகரம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதன் கீழ் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை வணிகர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அனைத்து வணிகர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளித்து கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!