WhatsApp பயனர்களுக்கான ஷாக் நியூஸ் – விரைவில் பிரீமியம் கட்டணம்!
வாட்ஸ்அப் நிறுவனத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்காத காரணத்தினால் பிரீமியம் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை மட்டுமே இலவசமாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது பயனர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
WhatsApp நிறுவனம்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு தான் மெட்டா நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பை $19 பில்லியனுக்கு வாங்கியது. அதாவது, விலையுயர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கிவிட வேண்டும் என்பது தான் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மிக பெரிய சவாலாக இருந்தது. அதன்படி, சவாலை எதிர்கொண்டு மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கிவிட்டார்.
Exams Daily Mobile App Download
ஆனால், மார்க் ஜுக்கர்பெர்க் நினைத்த அளவிற்கு வாட்ஸ்அப் நிறுவனத்தில் நல்ல வருமானத்தை உருவாக்க முடியவில்லை. முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டில் தான் பிரையன் ஆக்டோம் மற்றும் ஜான் கோம் ஆகியோரால் வாட்ஸ்அப் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு வரைக்கும் வாட்ஸ்அப் செயலியை 400 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு பிறகு வாட்ஸ்அப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் சொந்தமாக்கிய பிறகு பலரும் வாட்ஸ்அப் செயலியில் இனிமேல் தகவல்கள் பாதுகாக்கப்படாது என நினைத்து டெலிகிராம் செயலிக்கு மாறினர்.
Post Office ல் மூத்த குடிமக்களுக்கான ஸ்பெஷல் திட்டம் – முழு விவரங்கள் இதோ
அதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக டெலிகிராம் நிறுவனமும் படையெடுத்தது. இருப்பினும் தற்போது வாட்ஸ்அப் செயலியை 2 பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் கூட வணிக ரீதியாக மெட்டா நிறுவனத்திற்கு அதிக லாபத்தை ஈட்ட முடியவில்லை. இதனால், மெட்டாவின் பங்குதாரர்களுக்கு ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப் நிறுவனத்தை விற்கலாம் என முடிவெடுத்துள்ளார் அல்லது பிரீமியம் பயனர்களுக்கு சில வகையான கட்டணங்களை வசூலிக்கும்படியான திட்டத்தை செயல்படுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்படியானால் watts App தேவை இல்லை.