பென்ஷன் வாங்குவோர் கவனத்திற்கு – இனி அலட்சியமாக இருந்தால் ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது!
மத்திய அரசு ஊழியர்களுக்காக அகவிலைப்படி மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்ட நிலையில், இதைத்தொடர்ந்து 18 மாத நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி பெறுவதில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
அரசு ஊழியர்கள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து 18 மாத நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஊழியர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது சிசிஎஸ் விதிகள் 2021 கீழ் உள்ள விதி 8-ஐ மாற்றியுள்ளது.
எட்டாக்கனியான தங்கம்.. தொடரும் விலை உயர்வு – ஷாக்காக்கும் இன்றைய நிலவரம்!
இந்த புதிய மாற்றத்தின் படி, அரசு ஊழியர்கள் பணியின்போது கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்பட்டால் அந்த ஊழியர் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி நிறுத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தற்போது பணியின் மீது ஊழியர்கள் ஏதேனும் தவறு செய்தால் நிதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்கு துறையிலிருந்து ஓய்வு பெற்றவராக இருப்பின் அவரின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் சிஏஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒரு ஊழியர் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பெற்று வரும் நிலையிலும், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பகுதி அளவு அல்லது முழுவதுமாக திரும்ப பெறப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.