இந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது.. பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் ஜி.பி.முத்துவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நடப்பு பிக் பாஸ் சீசனை விட்டு ஜி.பி. முத்து வெளியேறியுள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று அவருக்கு நேர்ந்துள்ளது.
பிக் பாஸ்:
டிக் டாக் மூலம் பிரபலம் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜி.பி. முத்து. ரசிகர்கள் இவர் மேல் பெரிய எதிர்பார்ப்பு வைத்து இருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பை இவர் நன்றாக பூர்த்தி செய்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு டாஸ்க்களில் சிறப்பாக விளையாடினார்.
Follow our Instagram for more Latest Updates
தற்போது தன் குடும்பத்தை பிரிந்து வாழ முடியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறியுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் அவர் மேல் கொண்ட அக்கறையினால் அவர் முடிவுக்கு ரசிகர்களும் மதிப்பளித்தனர். தன் மகனை பார்க்கத்தான் ஜி.பி. முத்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியாகி உள்ள ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணுவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கூடிய சீக்கிரமே விஷ்ணு குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.