ஏர்டெல் (Airtel) பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ரூ.45 ரீசார்ஜ் திட்டம் இனி இல்லை!
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தங்களது மொபைல் எண்ணை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அதிகம் பயன்படுத்தும் ரூ.45 ப்ரீபெய்ட் திட்டம் இனி இல்லை. அதற்கு பதிலாக ரூ.128 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்:
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனங்களில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒன்றாகும். அதில் குறைந்த விலையில் பல சிறப்பு திட்டங்களை, ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு என அனைத்திலும் வழங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூ.45 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கிற்கு பதிலாக ரூ.128 ப்ரீபெய்ட் திட்டத்தை எஸ்.யூ.கே (Start-Up-Kit) திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 19 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த ரூ.128 ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக் ஆனது உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்பை வினாடிக்கு 2.5 பைசாவுடன், உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி எஸ்எம்எஸ்களை முறையே ரூ.1 மற்றும் ரூ.1.50 க்கும் வழங்குகிறது. இந்த சலுகை அனைத்தும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். நீங்கள் உங்களது சிம்கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பினால் இதை ரீசார்ஜ் செய்யலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும் கட்டணம் செல்லுபடியாகும் காலத்திற்கு பின்னர் குறைந்தபட்சம் ரூ.128 அல்லது அதற்கு மேற்பட்ட வவுச்சருடன் ரீசார்ஜ் செய்யாவிட்டால் 15 நாட்கள் வரை குறைக்கப்பட்ட முறையில் சலுகைகள் வழங்குவதற்கான உரிமையை கொண்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகும் ரூ.128 அல்லது அதற்கு மேற்பட்ட வவுச்சருடன் ரீசார்ஜ் செய்யாவிட்டால், மேற்குறிப்பிட்ட சலுகை காலத்திற்குப் பிறகு, அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.