மூன்லைட்டிங் முறையால் பாழாகும் ஐடி துறை – முக்கிய தலைவர் கூறிய அதிர்ச்சி தகவல்!
நாடு முழுவதும் தற்போது ஐடி துறையில் மிகவும் பரபரப்பாக மூன்லைட்டிங் முறை பற்றிய கருத்துக்கள் தான் பேசப்பட்டு வரும் நிலையில் மற்ற நிறுவனங்களின் தலைவர்கள் இது பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மூன்லைட்டிங் முறை:
ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே இன்னொரு நிறுவனத்திலும் மாலை நேரம், இரவு நேரம் அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்வதுதான் மூன்லைட்டிங் எனப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த முறை பல காலமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது தான் அதிகம் கவனத்தை பெற்று வருகிறது. ஐடி நிறுவன ஊழியர்கள் தங்கள் பணத் தேவைகளுக்காக மற்ற நிறுவனங்களிலும் வேலை செய்கின்றனர்.
இந்நிலையில், விப்ரோ நிறுவனம் தங்கள் ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையில் மற்ற நிறுவனங்களில் பணி புரிவது தெரிந்தால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது. விப்ரோவின் இந்த கருத்தை பலதரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். மேலும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் ஊழியர்கள் மற்ற நிறுவனங்களில் வேலை செய்வதை தடை செய்யாமல், ஆதரிப்பது பற்றிய செய்தியும் வெளியாகின்றன.
Exams Daily Mobile App Download
நீங்க கால் டாக்சி புக் பண்ணுவீங்களா? இனி அதிக பணம் செலவிட நேரும்! கவலையில் வாடிக்கையாளர்கள்!
தற்போது ஆர்ஜிபி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா அவர்கள், நாட்டின் முன்னணி நிறுவனமான விப்ரோவை ஸ்விக்கியுடன் ஒப்பிடுவது கூடாது என்று கூறியுள்ளார். மேலும், மிகப்பெரிய அளவில் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் விப்ரோ நிறுவனத்திற்கு முக்கியமான ரகசிய தகவல்கள் இருக்கும். இந்த விஷயத்தில் சோதனை செய்ய முடியாது. ஆனால் ஸ்விக்கி நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியில் இருந்து பணி செய்வதால் அவர்களுக்கு ரகசிய தகவல்கள் இருக்காது. எனவே பணியில் பாதிப்பு நிகழாது என்று விப்ரோ நிறுவனத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்