TNPSC வெளியிட்ட முக்கிய உத்தரவு 2022 – தேர்வர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி நியமனத்தில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2,2A தேர்வின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மே 21 அன்று போட்டித் தேர்வு நடைபெறும் என்றும் மார்ச் 23ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் அறிவிப்பு!
தற்போது 7000 க்கும் குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி நியமனத்தில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில், தோல்வியடைந்தவருக்கு சட்டவிரோதமாக பணி ஆணை வழங்கியதாக ஏற்கெனெவே குற்றச்சாட்டு எழுந்தது.
Exams Daily Mobile App Download
பயிற்சி அடிப்படையில் பணி நியமனம் செய்வதில்லை என்று சொல்லிவிட்டு, விதிகளை மீறி 8 க்கும் மேற்பட்டவர்களை பணி நியமனம் செய்தது தெரிய வந்தது. இது குறித்த குறித்த விவரங்களை போக்குவரத்து துறையும் TNPSC நிர்வாகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தர மறுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து புகார் விசாரிக்க அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.