கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மத்திய அரசின் அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மத்திய அரசின் அறிவிப்பு - முழு விவரம் இதோ!
கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மத்திய அரசின் அறிவிப்பு - முழு விவரம் இதோ!
கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மத்திய அரசின் அறிவிப்பு – முழு விவரம் இதோ!

2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆட்டோமொபைல் துறை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்பு பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

பட்ஜெட் அறிவிப்பு:

விவசாயம், கல்வித்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட பல துறைகள் குறித்து நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியானது. அது மட்டுமில்லாமல் ஆட்டோமொபைல் துறை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அவரின் இந்த அறிவிப்பு கார் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, அதாவது முழுமையாக கட்டப்பட்ட யூனிட்டுகளுக்கு கஸ்டம் டூட்டியை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை… மிக கனமழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை தகவல்!!

இந்த கட்டணமானது மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி வெளிநாட்டில் இருந்து வரும் சொகுசு கார்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 40,000 டாலர்களுக்கு குறைவான விலையுள்ள CBU வாகனங்களுக்கான இறக்குமதி வரி 60ல் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது எனவும் அது 3,000 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்களுக்கும், 2,500 சிசிக்கு குறைவான டீசலில் இயங்கும் வாகனங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 40,000 டாலர்க்கும் அதிகமான மதிப்புள்ள முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது, இந்த வரி விகிதம் 3000 சிசிக்கு மேல் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்களுக்கும், 2500 சிசிக்கு மேல் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கும் பொருந்தும் என தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் அதற்கு காரணம் தற்போது பெரும்பாலான சொகுசு கார்கள் நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. மேலும் இந்த இறக்குமதி வரி உயர்வு உள்நாட்டு கார் உற்பத்தியை ஊக்குவிக்கும் எனவும் தரமதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏவின் மூத்த துணைத் தலைவர் ஷம்ஷேர் திவான் கூறியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!